
வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும் பெரும் மன உறுதியும் நீ கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி உடையவன். ‘சமுத்திரத்தையே குடித்து விடுவேன்; மலையையே உடைத்தெறிவேன்’ என்கிறான். அத்தகைய ஆற்றலை, மன உறுதியை நீ பெற வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். உனது குறிக்கோள் உன்னை வந்தடையும்.
நம்பிக்கை இழக்காதே. கத்தி முனையில், கயிற்றில் நடப்பதைப்போல வாழ்க்கைப் பாதை மிகவும் கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடைய நினைத்த உனது இலட்சியம், குறிக்கோளை நோக்கி பீடு நடை போடு. வெற்றி உன் பாதையில் வந்து உன்னை வாழ்த்தி வரவேற்கும்.
நீ செய்யும் எந்தக் காரியத்தையும் ஒரே மன முனைப்புடன் செய். மனம் சிதறிவிடாமல் பார்த்துக்கொள். மனம் ஒரு முகப்படப்பட தன் ஆற்றல் ஒரே இடத்தில் நிலை பெறுகிறது. இது தான் மனதின் ஆற்றல் என்பது.
No comments:
Post a Comment