Friday, December 10, 2010

சுவாமி விவேகானந்தர் வாக்கு

‘இல்லை’ என்று ஒருபோதும் சொல்லாதே ‘என்னால் இயலாது’ என்றும் சொல்லாதே. ஏனெனில் நீ வரம்பில்லாத வலிமை பெற்றவன். உன்னுடைய உண்மை இயல்போடு ஒப்பிடுகையில், காலமும் இடமும்கூட உனக்கு ஒரு பொருட்டல்ல. நீ எதையும் எல்லாவற்றையும் சாதிக்கக் கூடியவன். சர்வ வல்லமை படைத்தவன் நீ.
வெற்றி பெறுவதற்கு நிறைந்த விடாமுயற்சியும் பெரும் மன உறுதியும் நீ கொண்டிருக்க வேண்டும். விடாமுயற்சி உடையவன். ‘சமுத்திரத்தையே குடித்து விடுவேன்; மலையையே உடைத்தெறிவேன்’ என்கிறான். அத்தகைய ஆற்றலை, மன உறுதியை நீ பெற வேண்டும். கடுமையாக உழைக்க வேண்டும். உனது குறிக்கோள் உன்னை வந்தடையும்.
நம்பிக்கை இழக்காதே. கத்தி முனையில், கயிற்றில் நடப்பதைப்போல வாழ்க்கைப் பாதை மிகவும் கடினமானதுதான். எனினும் எழுந்திரு. விழித்துக் கொள். மனம் தளராதே. நீ அடைய நினைத்த உனது இலட்சியம், குறிக்கோளை நோக்கி பீடு நடை போடு. வெற்றி உன் பாதையில் வந்து உன்னை வாழ்த்தி வரவேற்கும்.
நீ செய்யும் எந்தக் காரியத்தையும் ஒரே மன முனைப்புடன் செய். மனம் சிதறிவிடாமல் பார்த்துக்கொள். மனம் ஒரு முகப்படப்பட தன் ஆற்றல் ஒரே இடத்தில் நிலை பெறுகிறது. இது தான் மனதின் ஆற்றல் என்பது.

No comments:

Post a Comment